Pages

Thursday, August 16, 2012

எதற்காக இந்த சுதந்திர தினம் ?

 இந்த கேள்வியை நான் கேட்க காரணம் நேற்று நடந்தவைகள் !



சுதந்திர தினத்தன்று  கூட திறந்திருக்கும் சாராய கடைகள்! (கர்நாடகா),

அதற்கு எதிரிலேயே கட்டப்படும் ஜெயின் மத கோயில் .  சுதந்திரத்தை போற்றும் வகையில் அவர்கள் ஏற்றிய தேசிய கொடி! மிட்டாய் கொடுப்பார்கள்  என்று அங்கு காத்திருந்த கட்டிட தொழிலாளர்கள்,

 முதலாளிகள் தனியாகவும், தொழிலாளர்கள் தனியாகவும் நிற்க இன்னும் சிலர் தனியாக நிற்கின்றனர் ! யார் அவர்கள் ? தீண்டாமை? அப்புறம் எதுக்குயா கொடி ஏத்துறீங்க ? அதைவிட ஒரு பெரிய கொடுமை இன்னும் அந்த கொடி இறக்க படவில்லை:(

சலிக்காமல் இந்தியாவை முடிந்த அளவு தாழ்த்திவிட்டு  சுதந்திர தின வாழ்த்து சொன்ன என் பேஸ் புக் நண்பர்கள்.

காலையிலிருந்து இரவு வரை விதவிதமான திரைப்படங்களை பாருங்கள் சுதந்திரதினத்தை போற்றுங்கள் என்று கூறிய தொலைகாட்சிகள்.

பெயரளவில் மூடிவிட்டு உள்ளே வேலை செய்து கொண்டிருக்கும் ஐ டி ஊழியர்கள்.

80 ரூவா பாட்டிலை 150 ரூவாய்க்கு விற்று உண்மையான சுகந்திரத்தை அனுபவித்த நம்ம ஊர் டாஸ்மாக் பார்ட்டிகள்.

இப்படி நிறைய இருக்கிறது நேற்று நடந்த கூத்துக்கள், சொலுங்கள் எதற்காக இந்த சுதந்திர தினம் ?

No comments:

Post a Comment